
என்.பி.பி அரசு, ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களை அண்மிக்கிறது. அதற்கிடையில் இந்த ஆட்சியோடு தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் பிரச்சினைகளையும் நாம் கண்டு வருகிறோம். அரசு அண்மித்து வரும் தேர்தலில் தோல்வியடையப் போகிறது. என்.பி.பி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை போன்ற கருத்துக்கள் படிப்படியாக எழும்பத் தொடங்கி உள்ளன. அத்தோடு இந்த அரசு சிறுபான்மைக்குச் சாதகமான அரசுமல்ல. அந்த வகையில் அது பழைய அரசுகள் போன்றதுதான் என்ற குரல்களும் வலுப்பட்டு எழுந்து வருகின்றன. இந்நிலையில் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் இந் நிலைமைகளை எவ்வாறு நோக்க வேண்டும் என்பது பற்றிய சில அபிப்பிராயங்களே இங்கு தரப்படுகின்றன.