நானுஓயாவில் தடம்புரண்ட எல்ல ஒடிஸி ரயில் – பயணிகள் சிரமம்

நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்விருந்த எல்ல ஒடிஸி ரயில் நானுஓயாவில் இன்றையதினம் தடம் புரண்டுள்ளதாக தெரியவந்துள்ளது

குறித்த ரயில் இன்று காலை  நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது.

பதுளை நோக்கிப் பயணிக்க  வருகை தந்திருந்த பயணிகள் பாரிய சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர். 

 எனினும் மிக விரைவில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரயில் சேவை  வழமைக்குத் திரும்பவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது 

Leave a Reply