கட்டைக்காடு ஆலயத்தில் நற்கருணை பவனி

தவக்காலத்தை முன்னிட்டு வடமராட்சி கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தால் நற்கருணை பவனி நேற்று (5) இடம்பெற்றது 

கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை அ.அமல்ராஜ் அடிகளார் தலைமையில் மாலை 05.00 மணியளவில் நற்கருணை பவனி ஆரம்பமானது 

ஆலயத்தில் இருந்து மக்கள் குடியிருப்புக்கள் ஊடாக பக்தியுடனான செபமாலை தியானத்துடன் நகர்ந்து மீண்டும் ஆலயத்திற்கு நற்கருணை பவனி அழைத்துவரப்பட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது

குறித்த தவக்கால நற்கருணை பவனியில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு பவனியை சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *