அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ), இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள அதன் புதிய கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தில் (CWIT) அதிகாரப்பூர்வமாக செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
அதானி குழுமம் துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்னர், 2022 முதல் இந்த முனையம் கட்டுமானத்தில் உள்ளது.
35 ஆண்டுகால கட்டமைத்தல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம் (BOT) ஒப்பந்தத்தின் கீழ், APSEZ, இலங்கை கூட்டு நிறுவனமான ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டமைப்பால் CWIT உருவாக்கப்பட்டது.
$800 மில்லியன் செலவில் தொடங்கப்பட்ட இந்த CWIT திட்டம் 1,400 மீட்டர் நீளமும் 20 மீட்டர் ஆழமும் கொண்டது.
இதனால் முனையம் ஆண்டுதோறும் சுமார் 3.2 மில்லியன் கொள்கலன்களை கையாள முடியும்.
இந்த திறன் தெற்காசியாவின் முக்கிய டிரான்ஷிப்மென்ட் மையமாக கொழும்பு துறைமுகத்தின் நிலையை உயர்த்தும்.
APSEZ இன் படி, CWIT என்பது கொழும்பில் முழுமையாக தானியங்கிமயமாக்கப்பட்ட முதல் ஆழ்கடல் முனையமாகும், இது பொருட்கள் கையாளுதல் மற்றும் கப்பல் திரும்பும் நேரத்தை மேம்படுத்துகிறது.
இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி,
CWIT-ல் செயல்பாடுகள் தொடங்குவது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்தத் திறப்பு விழா இலங்கைக்கு பெருமை சேர்க்கும் தருணமாகும், இது உலக கடல்சார் வரைபடத்தில் உறுதியாக இடம்பிடித்துள்ளது – என்றார்.
கடந்த ஆண்டு, அமெரிக்க சட்டத்தரணிகள், கௌதம் அதானி மீது இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, CWIT திட்டம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதானி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
ஆனால் கென்யா உட்பட சில நாடுகள் அவரது நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டியிருந்தது.
CWIT திட்டம் முன்னேறிய போதிலும், அது அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து $500 மில்லியன் கடன் உத்தரவாதம் இல்லாமல் தொடர்ந்தது.
2023 நவம்பரில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனம், CWIT திட்டத்திற்கு ஆதரவளிக்கும் கடனை அறிவித்தது.
டிசம்பரில் அதானி குழுமம் கடன் ஒப்பந்தத்திலிருந்து விலகிய நேரத்தில் நிதியுதவி செயல்படுத்தப்படவில்லை.
அந்த நேரத்தில், நிறுவனத்தின் உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் முனையத்திற்கு நிதியளிப்பதாக அதானி குழுமம் கூறியது.
CWIT இப்போது திறக்கப்பட்டுள்ளதால், கொழும்பில் உள்ள பிற முக்கிய முனையங்களுடன் பொருட்கள் வணிகத்திற்காக அது போட்டியிட வேண்டியுள்ளது.
சீனாவின் ஆதரவு பெற்ற கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) துறைமுகம் வழியாக செல்லும் கொள்கலன்களில் மிகப்பெரிய பங்கைக் கட்டுப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு, CICT 3.3 மில்லியன் கொள்கலன்களை கையாண்டது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட முனையங்களான ஜெய் கொள்கலன் முனையம் மற்றும் ஆழமான நீர் கிழக்கு கொள்கலன் முனையம் 2.4 மில்லியன் கொள்கலன்களை கையாண்டன.
ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸால் இயக்கப்படும் தெற்காசிய கேட்வே முனையம் (SAGT) 2 மில்லியன் கொள்கலன்களை கையாண்டது.
மொத்தத்தில், கொழும்பு துறைமுகம் 7.7 மில்லியன் கொள்கலன்களை கையாண்டது.
இது 2023 உடன் ஒப்பிடும்போது 12.3 சதவீதம் அதிகம்.
இதனிடையே, CWIT செயல்பாடுகளைத் தொடங்குவதாக APSEZ நிறுவனம் திங்களன்று அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் வலுவான மீட்சியைக் கண்டன.
அமர்வின் தொடக்கத்தில் சரிந்த இந்தப் பங்கு, குறைந்த விலையிலிருந்து 6.5 சதவீதம் உயர்ந்து, இறுதியில் 3.30 சதவீதம் நிறைவடைந்து 1,110 கோடி இந்த ரூபாவில் முடிவடைந்தது.