இலங்கை மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு:ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று..!

இலங்கை மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆராய்வதற்காக இன்றையதினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளும் பங்கேற்கவுள்ளன.

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரித் திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய வழிமுறைகள் மற்றும் அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது எக்ஸ் பக்கத்தில பதிவொன்றை இட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *