
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகளுக்கு அமைய, சஹ்ரான் கும்பலுடன் தொடர்புகளைப் பேணியதாக கூறபப்டும் உளவுத் துறையின் சொனிக் சொனிக் எனும் பெயரால் அறியப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை சி.ஐ.டி.யினர் விசாரணை செய்துள்ளனர். தொடர்ச்சியாக விசாரணைகளை தவிர்த்து வந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் கடந்த 7 ஆம் திகதி இவ்விசாரணைகள் நடாத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.