
எவ்வித விஞ்ஞான அடிப்படைகளுமின்றி அநியாயமாக கொவிட் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் 06, 2025 அன்று கொழும்பு -– 06 மெரைன் கிரேண்ட் மண்டபத்தில் அதன் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை இலங்கை இஸ்லாமிய மற்றும் சமூக அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன.