எல்லே போட்டியில் கிளிநொச்சி புனித திரேசாள் பெண்கள் கல்லூரி அணி சம்பியன்

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் 2025ம் ஆண்டுக்கான பெரு விளையாட்டுக்களின் வரிசையில் பெண்களுக்கான எல்லே போட்டி இன்றைய தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

இறுதிப்போட்டியில் கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையும் புனித திரேசாள் பெண்கள் கல்லூரியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகின.

இறுதிப்போட்டியில் புனித திரேசாள் பெண்கள் கல்லூரி அணி 5ற்கு 1 என்ற கணக்கில் கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வீழ்த்தி சம்பியனாகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *