மலேசியாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கையர் ஒருவரும் அவரது நாயும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உடலை நெருங்க அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் உடலில் எந்த காயங்களும் இல்லை,
மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.