
இன்றைய உலகில் பிள்ளைகளுக்கிடையேயான உளவியல் பிரச்சினைகள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. அதனால் தற்கொலை, விரக்தி, மன அழுத்தம் போன்றவை சமூக சிக்கல்களாக உருவாகியுள்ளமையையும் அவதானிக்கலாம். இதனை சமூக நோக்கிலும் உளவியல் நோக்கிலும் அவதானிப்பது முக்கியமாகும். சாதாரணமாக பிள்ளைகளின் பிரச்சினைகள் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களை சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் சிதம்பர சக்கரமாக தான் இருக்கும். அதனை சரியாக அணுகுவது பிள்ளைகளை பராமரிப்பவர்களின் கட்டாயக்கடமையாகும்.