நாச்சிக்குடா மீன்பிடி இறங்குதுறைக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்..!

நாச்சிக்குடா இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு முன்னான் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை விஜயம் மேற்கொண்டார்.

இறங்குதுறைப் பகுதியில் வான்தோண்டும் பணிகள் பூர்த்தியான நிலையில் பிரதேச கடற்றொழிலாளர்களின் அழைப்பின் பெயரில் குறித்த பகுதியை டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார். 

மேற்படி பகுதியை வான்தோண்டி தருமாறு கடற்றொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பிரதேச கடற்றொழிலாளர்களினால் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக சுமார் முன்று மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இவ் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *