
சுற்றுலா நாடான மாலைதீவில் இஸ்ரேல் நாட்டின் கடவுச்சீட்டுகளின் மூலம் அந்நாட்டினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாலைதீவின் குடிவரவுச் சட்டத்தில் மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு அதன்மூலம் இந்தத் தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிவரவுச் சட்டத்தின் மூன்றாவது திருத்தத்திற்கு ஜனாதிபதி முஹம்மது முயீஸ் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

