தந்தை-மகன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்: இறுதியில் நடந்த துயர சம்பவம்..!

கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை பகுதியில் 54 வயதுடைய தனது தந்தையின் கொலை தொடர்பாக 20 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தகவலின் படி, தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்ததாகவும், இதன் போது மகன் இரும்பு கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மகனின் தாக்குதலில் காயமடைந்த தந்தை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *