அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல்: யாழ் பல்கலையில் உணர்வுபூர்வ அஞ்சலி..!

அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம்(19)  யாழ் பல்கலையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
அத்துடன், அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *