
ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டால், ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு மாதம் 100,000 லீற்றருக்கும் அதிகமான டீசல் தேவைப்படும் என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மின்சாரம் இல்லாத போது, டீசல் அவர்கள் தேவைக்காக மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இதற்கான டீசல் வழங்குவது நெருக்கடியாக உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சில சனல்கள் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பல வானொலி அலைவரிசைகள் ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
மின் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொலைபேசி சிக்னல் கோபுரங்களுக்கு இணைய வசதிகளை அதே வேகத்தில் வழங்குவது சவாலாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.





