நாட்டில் லொத்தர் சீட்டுகளின் விற்பனையும் முடங்கியது!

நாட்டில் காகித தட்டுப்பாடு காரணமாக நான்கு லொத்தர் சீட்டுகள் வழங்கப்படாமல் , பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக லொத்தர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, காகித தட்டுப்பாடு காரணமாக கொவிசெத, ஜாதிக சம்பத, வாசனா சம்பத, செவன ஆகிய லொத்தர் சீட்டுகள் தற்போது விற்பனைக்கு வரவில்லை என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நான்கு லொத்தர் சீட்டுகளும் கிடைக்காததால் தங்களின் நாளாந்த வருமானம் குறைந்துள்ளதாகவும் இந்த நிலைமைகளால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply