எரிபொருளை பெற மாட்டு வண்டிலில் சென்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்!

எரிபொருளைப் பெற்றுக்கொள்ள கொள்கலன்களுடன் மாட்டுவண்டியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று இடம்பெறும் நிலையில், தனது வாகனத்திற்கு எரிபொருள் இல்லாமையால் இவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொள்ள மாட்டு வண்டியில் பயணித்ததாக அவர் மக்களிடம் தெரிவித்தார்.

இன்றைய தினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான மக்கள் கூடியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply