வடமாகாண ஆளுநர் மற்றும் பிரிட்டன் தூதுவரிடையே சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயன் அவர்கள், பிரிட்டன் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலர் ஹென்றி டொனைட் அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று (10.12.2024) காலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநாராக நியமிக்கப்பட்டமைக்கு முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்த முதனிலைச் செயலர், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தனது பயணத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில், இந்த புதிய அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என வடக்கு மாகபண ஆளுநர், ஹென்றி டொனைட்டிடம் தெரிவித்ததோடு,

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடமிடந்து இன்னமும் காணிகள் விடுவிடுக்கப்பட வேண்டும் எனவும், குறிப்பாக மக்களின் காணிகள் கடந்த காலங்களில் அவர்கள் இடம்பெயர்ந்திருந்த சந்தர்ப்பங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிர்கள் பிரிசுரிக்கப்பட்டமையால் தற்போது சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

The post வடமாகாண ஆளுநர் மற்றும் பிரிட்டன் தூதுவரிடையே சந்திப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *