சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23) ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் தெதுருஓயாவில் ஒரளவு மழை நீர் நிறைந்து காணப்படுகிறது.
சிலாபம் நகரில் சில வடிகால்கள் அடைபட்டதன் காரணமாக இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும் எனவே உரிய தரப்பினர் விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.