
சிங்கள தேசிய இயக்கம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய, பொது ஜன பெரமுனவின் கொலன்னாவ நகர சபை வேட்பாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அன்றைய தினம் இரவு 11.20 மணியளவில் அவர் உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்தது.