கிளிநொச்சியில் இராணுவப்புழுவின் தாக்கம் அதிகரிப்பு , கட்டுப்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும்- விவசாய பணிப்பாளர் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் படைப்புளு என்று சொல்லப்படுகின்ற அறக்கொட்டியான் புழுவின்  தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகள்  விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி கட்டுப்ப்படுத்த முன் வரவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயராசா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்

கிளிநொச்சி மாவட்டத்தில் 12000ற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்கின்ற நிலையில் அறக்கொட்டியான் புழுவின் தாக்கம் மாவட்டத்தின் பல பகுதிகளில் காணப்படுகின்ற நிலையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விவசாய போதனாசிரியர்கள் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில் குறித்த புழுவை கட்டுப்படுத்த விவசாய திணைக்கள மற்றும் போதனாசிரியர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *