கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றுள்ளார்.
தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகை (Archbishop Brian N. Udaigwe) வரவேற்ற்றுள்ளார் .
அதன் பின்னர், பேராயருடன் சிறிது நேரம் உரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் குறிப்பொன்றைப் பதிந்துள்ளார்
இன் நிலையில் நித்திய இளைப்பாறிய பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸ்காக உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களினதும் இரங்கலை ஜனாதிபதி தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.