கிளிநொச்சியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

கிளிநொச்சி – தர்மபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்னாறு பகுதியில் வீடொன்றில் இன்று அதிகாலை 20 கிலோ கேரள கஞ்சாவினை சிறப்பு அதிரடி படையினர் மற்றும் தருமபுர போலீசார் இணைந்து  கைப்பற்றினர். 

சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

அந்த வீட்டு உரிமையாளரான பொண் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்கள் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த தர்மபுர  போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply