
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான 6 ஆவது ஆண்டு விசேட பிரார்த்தனை, பாதயாத்திரை உள்ளிட்ட நினைவு அஞ்சலி நிகழ்வுகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் நடைபெற்றன. கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற இந்த 6 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் முதற் கட்டமாக பாத யாத்திரை நடைபெற்றது.