
தலைப்பிற்கு செல்ல முன்னால், நான் தற்காலத்தில் கல்விச் சூழலில் கண்ட மற்றும் ஊடகங்களின் ஊடாக அறிந்த சில தவறுகளை வைத்து இதை எழுதுகிறேன். எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் உண்மையிலே சிறந்தவர்கள். தப்பைக் கண்ட இடத்தில் தட்டிக் கேட்பவர்கள். நான் இதை எழுதுவதற்கு எழுத்துச் சொல்லித் தந்தவர்களும் அவர்களே. அவர்களை அவமதித்து எழுதவில்லை. உலகிற்கே நீதியான ஆட்சி நடாத்திய கலீபா உமரின் தவறையே ஸஹாபாச் சமூகம் சுட்டிக் காட்ட பின்வாங்கவில்லை என்றபோது இதெல்லாம் எம்மாத்திரம் என்ற தைரியத்தை முன் வைத்து எழுதுகிறேன்.