சித்தங்கேனி சிறுமி துஷ்பிரயோகம்; மனித உரிமைகள் ஆனணக்குழுவால் வெளிவந்த உண்மை

த்தங்கேனி சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யபட்டமை தொடர்பில்இலங்கை மனித உரிமைகள் ஆனணக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தின் நட்வடிக்கையின் மூலமே வெளிகொணரப்பட்டது என பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். 

இச்சிறுமி 12 வயது வயதிலிருந்தே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். 

கடந்த 24.04.2025 அன்று இச்சிறுமி எமது அலுவலகம் வருகைதந்து தனக்கு ஏற்பட்ட துஷ்பிரயோகத்தை முறையிட்டார். 

எமது அலுவலகம் துரிதமாக செயற்பட்டு அன்றைய தினமே வடமாகாண நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் ஊடாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலயே சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *