வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி – நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகம்மது!

வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற  மாணவியை நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகம்மது!  நேரில் சென்று பாராட்டியள்ளார்

வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் க.பொ. உயர்தர பரீட்சையில் முகம்மட் பைசல் அஸ்ரா முதலாம் இடம் பெற்றுள்ளார் .நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகம்மது நேரில் சென்று பார்வையிட்டு மாணவியையும்,பெற்றோரையும் பாராட்டி உற்சாகப்படுத்தி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

சாளம்பைக்குளத்தை பிறப்பிடமாக கொண்ட குறித்த மாணவி, வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் கல்வி கற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவி கடந்த க.பொ.சாதாரண தர பரீட்சையிலும் 9A பெற்றமை குறிப்பிடத்தக்கது

இவரது கல்வி உயர்வுக்கு உதவிய முகமது சரிபு முகம்மது பைசல் தம்பதியரையும், பாடசாலையும் பாராட்டுவதில் மகழ்ச்சி அடைவதாக கூறி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *