வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க முயன்றவர்களுக்கு நடந்த கதி!

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க முயன்ற நான்கு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

வில்பத்து தேசிய பூங்காவின் குகுல்கடுவ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா ஈச்சங்குளம் , மொனராகலை ரணவராவ மற்றும் அநுராதபுரம் ஓயாமடுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது

இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *