யாழில் 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

யாழில் 500 கிலோ  மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சள் இன்றையதினம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவால் குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன் 25 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு கைமாற்றும் போதே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதான சந்தேக நபரை ஊர்காவாற்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *