அக்ஷய திருதியை தினத்தில் யாழில் திடீரென உயர்ந்த உப்பு விலை..!

அக்ஷய திருதியை தினமான நேற்றையதினம் யாழ் வடமராட்சியில் ஒரு கிலோ உப்பு 500 ரூபாய்க்கு விற்பனையானதாக தெரிய வருகின்றது.

அக்ஷய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியிலுள்ளது. 

அதேவேளை, தங்கத்தை வாங்க முடியாதவர்கள் உப்பு அல்லது மஞ்சளை வாங்கலாம் என்பதும் நம்பிக்கை.

இந்த நிலையில், அக்ஷய திருதியை தினமான நேற்று வடமராட்சியின் பல பகுதிகளில் ஒரு கிலோ உப்பு 500 ரூபாய் வரை விற்பனையானதாக தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *