அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் சேவை தாமதம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் கொடுப்பனவு மேற்கொள்வதற்கான நடவடிக்கை தாமதமாகும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி.கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும்.

இன்று முதல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *