யாழில் வடமாகண தொழிற்சங்கங்களின் மோட்டார் சைக்கிள் பேரணி

வடமாகண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  மேதின பேரணியொன்று யாழில் நடைபெற்றது. 

மேதினத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பேரணிகள் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பேரணியை நடாத்தியிருந்தன.

இமற்கமைய நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான மேதின மோட்டார் சைக்கிள் பேரணியானது ஆரியகுளம் சந்தி – ஸ்ரான்லி வீதியூடாக யாழ் நகரை அடைந்து யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வைஎம்சிஏ மண்டபத்தில் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *