நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் தேசிய பேரவையின் மே தின எழுச்சி கூட்டம்..!

தமிழ் தேசிய பேரவையின் மே தின எழுச்சி கூட்டம் இன்று மாலை  நெல்லியடி மாலுசந்தி மைதானத்தில் இடம்பெற்றது.

இதன் பொழுது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இரு பிள்ளைகளை மாவீரராக இனத்திற்கு வழங்கிய தாயாரால் பொதுச் சுடரேற்றபட்டது .

தொடர்ந்து மங்கள விளக்கேற்றி மே தின எழுச்சி கூட்டம் ஆரம்பமானது.

இதன் பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  செயலாளர் செல்வாராசா கஜேந்திரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், அருந்தவபாலன்,எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *