தமிழ் தேசிய பேரவையின் மே தின எழுச்சி கூட்டம் இன்று மாலை நெல்லியடி மாலுசந்தி மைதானத்தில் இடம்பெற்றது.
இதன் பொழுது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இரு பிள்ளைகளை மாவீரராக இனத்திற்கு வழங்கிய தாயாரால் பொதுச் சுடரேற்றபட்டது .
தொடர்ந்து மங்கள விளக்கேற்றி மே தின எழுச்சி கூட்டம் ஆரம்பமானது.
இதன் பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வாராசா கஜேந்திரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், அருந்தவபாலன்,எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.