புங்குடுதீவு – குறிகாட்டுவான் துறைமுகத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்கில், அங்கு பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக விசேட கள ஆய்வுப் பயணம் இன்றையதினம்(01) மேற்கொள்ளப்பட்டது.
இவ் விசேட விஜயத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் ரணசிங்க தலைமையிலான அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர், பொறியியலாளர்கள், கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.