
எதிர்வருகின்ற மே 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே குறித்த தேர்தல் தற்போது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளன. இதனால், கட்சிகளினாலும் சுயேட்சைக் குழுக்களினாலும் தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.