
கொழும்பு, மார்ச் 10
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் எதிர்வரும் 15 ஆம் திகதி சந்திப்பு ஒன்று
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பல முறை முயன்றது. எனினும், ஜனாதிபதி அதற்கு நேரம் ஒதுக்கியிருக்கவில்லை. அண்மையில் ஜனாதிபதி மாளிகையின் முன்பாக தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கூட்டமைப்பினரை ஜனாதிபதி சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.





