ஒன்றுகூடுவதை தவிர்க்கவும்; நாடு முழுவதும் இன்றும் நாளையும் 24 மணி நேர பொலிஸ் நடமாடும் ரோந்துகள் இயங்கும்!

வாக்குச் சாவடிகளைச் சுற்றி தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்குமாறும் அங்கு ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் அனைத்து பொதுமக்களையும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது

மேலும், வாக்குச் சாவடிக்குச் சென்று, வாக்களித்துவிட்டு அமைதியாக வெளியேறுமாறு  மக்களை அறிவுறுத்துகிறது.

வாக்குச் சாவடிகளுக்கு அருகில் பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புக்காக ஏராளமான பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இன்றும் நாளையும் நாடு முழுவதும் 24 மணி நேரமும் பொலிஸ் நடமாடும் ரோந்துகள் இயங்கும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply