
ஏப்ரல் 22ஆம் நாள் ஜம்மு காஷ்மீரின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். கோழைத்தனமான, இந்த பயங்கரவாதச் செயலை செய்தவர்கள் எவராயினும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். சட்டப்பிரிவு 370ஐ நீக்கிவிட்டோம். இனி பயங்கரவாதத்திற்கு இடமில்லை. சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி வரலாம் என்ற ஒன்றிய அரசின் கூற்றைத் தொடர்ந்து கோடை விடுமுறையை மகிழ்வாகக் கொண்டாட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தனர்.