
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களை பார்வையிடுவதற்கான அனுமதி இலங்கை இராஜதந்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்தியாவின் மும்பாயிலுள்ள இலங்கையின் உதவி கொன்சியூேலட் ஜெனரல் சசிரங்க ஜயசூரிய மற்றும் கொன்சியூேலட் ஜெனரல் அலுவலக உள்ளூர் அதிகாரி சுப்ரமணியம் செட்டியா நாராயணன் ஆகியோருக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.