
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த சபைகளில் ஆட்சியமைப்பது பற்றிய கதையாடல்கள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஆளும் தேசிய மக்கள் சக்தி 250க்கும் மேற்பட்ட சபைகளில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் எல்லா சபைகளிலும் அக் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாதுள்ள நிலையில் சுயாதீனக் குழுக்களை இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கத் தயார் என அக் கட்சி தெரிவித்துள்ளது. எனினும் எதிர்க் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.