
புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து வருகின்ற ஹாஜிகளை வரவேற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜித்தாவிலுள்ள இலங்கையின் கொன்சியூலேட் ஜெனரல் அலுவலகம் தெரிவித்தது. கடந்த 29ஆம் திகதியிலிருந்து ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக உலகளாவிய ரீதியிலிருந்து ஹாஜிகள் சவூதி அரேபியா செல்கின்றனர். இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செல்லவுள்ளது.