மனநலம் பாதிக்கப்பட்டவரால் பறிபோன முதியவரின் உயிர்

நாகொடை, கம்மெத்தேகொட பகுதியில் ஒருவர் பொல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நாகொடை, கம்மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். 

சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *