
ஆயுர்வேத பரம்பரையில் பிரபலமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பாக்கீர் மாக்கார், மே 12, 1917 அன்று பேருவளை மருதானையில் பிறந்தார். “நான் சிறுவனாக இருந்தபோது, பேருவளை, மருதானையில் உள்ள முஸ்லிம் பெண்கள் பாடசாலைக்கு எனது சகோதரியுடன் சென்றேன். அந்தப் பாடசாலைதான் இலங்கையின் முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலை. நான் மணல் பலகையில் எழுதிப் பழகினேன். பின்னர், கொழும்பு புனித செபஸ்டியன் கல்லூரியில் சேர்ந்தேன்.