ரன்பொடையில் மீண்டும் கோர விபத்து – 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

கெரண்டி எல்லவில் பயங்கர பேருந்து விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

விபத்தில் காயமடைந்தவர்கள் 19 பேர் என பொலிஸார் தெரிவித்தனர். இதில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவித்தனர்.

இருப்பினும், அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *