வயலில் நெல் விதைக்கும் போது நடந்த விபரீதம்: ஒருவர் மரணம்..!

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் விஜயபுர பகுதியில் இடம்பெற்றது.

இவ் அனர்த்தம் நேற்றையதினம்(14) இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கி உயிரிழந்தவர் விஜயபுர, தமனேவெல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.

இறந்தவர் வயலில் நெல் விதைக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *