
பலஸ்தீன பூமி ஆக்கிரமிக்கப்பட்டு இம்மாதம் 15 ஆம் திகதியுடன் 77 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. கொழும்பிலும் நக்பா தின நிகழ்வு பலஸ்தீன தூதரகம் மற்றும் பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டுக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் ஹரினி அமரசூரியவும் கெளரவ அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொள்ளவுள்ளனர்.