
இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 மே 08ஆம் திகதி, கொழும்பு 02, நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. நாட்டின் தேசிய விளையாட்டு எனும் முக்கிய இடத்தை வகிக்கும் கரப்பந்தானது, இலங்கை கைப்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்த மதிப்புமிக்க போட்டியை ஏற்பாடு செய்வதற்காக இலங்கை கரப்பந்து சங்கம் மற்றும் கல்வி அமைச்சின் பாடசாலைகள் கரப்பந்து சங்கத்துடன் இணைவதில், நாட்டின் முன்னணி பாதணிகள் உற்பத்தியாளரான DSI பெருமையடைகின்றது.