
முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு பிராந்தியத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகர சபை, ஏறாவூர் நகர சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை ஆகியவற்றில் அதிக ஆசனங்களை பெற்றுள்ளது. மேலும், மூதூர் பிரதேச சபையில் அதிக வாக்குகளை பெற்று அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது.