தமிழ் தேசியக் கட்சிகளை வச்சு செய்வதற்கு தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இடமில்லை! சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம்

வடக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கோ அல்லது தமிழ் தேசியக் கட்சிகளுக்கோ வச்சு செய்யப் போவதாகவும் தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது. என்னத்தை வச்சு செய்யப் போறீர்கள். 

யாரை வச்சு செய்யப் போறீர்கள். வச்சு செய்வதற்கு வடக்கில் இடமில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று  இடம்பெற்றது. 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை மக்கள் சர்வதிகாரம், கடத்தல், கொள்ளை, கற்பழிப்பு வேண்டாம் எனத் தான் 3 வீத வாக்கைப் பெற்றிருந்த ஜேவிபிக்கு 42 வீத வாக்கை கொடுத்து மக்கள் இந்த ஆசனங்களை கொடுத்திருந்தார்கள். 

இல்லை நாங்கள் 3 வீதத்திற்கு தான் போகப் போறோம் என்றால் அது அவர்களின் பிரச்சனை. 

வடக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கோ அல்லது தமிழ் தேசியக் கட்சிகளுக்கோ வைச்சு செய்யப் போவதாகவும் தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது. என்னத்தை வைச்சு செய்யப் போறீர்கள். 

யாரை வச்சு செய்யப் போறீர்கள். அதையும் கூற வேண்டும். வைச்சு செய்வதற்கு வடக்கில் இடமில்லை. இதே நிலையில் தேசிய மக்கள் சக்தி செல்வார்களாக இருந்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *