சக மாணவனின் கழுத்தை பிளேட்டால் வெட்டிய மாணவன்! – புல்மோட்டையில் விபரீதம்

அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது

சமீம் அஸ்ரி என்னும் 16 வயது மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்ட்டுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

  குறித்த மாணவன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கைகலப்பானது இரு மாணவர்களும் பாடசாலை முடிந்து வெளியே வரும்போது இருவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட  பிரச்சனையில் நடந்ததென ஆரம்ப கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது. 

குறித்த மாணவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சத்திர சகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *